Thursday 18 May 2017

எது சரி ? 'முக்கியச் செய்தி'யா அல்லது 'முக்கிய செய்தி'யா ?

தமிழ் மொழியின் பல சிறப்புகளில் ஒன்று அதன் இயற்கை தொனியியல் ஆகும் .பலர் தமிழில் மென்மையான தொனிகள் இல்லை என்று தவறாக கருதுகிறார்கள் .எடுத்துக்காட்டாக ,’dha’என்ற மென் ஒலி தமிழில் இல்லை என்று கருதுகிறார்கள் . இது தவறான எண்ணம் .’காதல் ‘என்ற சொல்லை சொல்லிப்பாருங்கள் !தானாகவே ‘’dha’ என்ற மென் ஒலி தொனிக்கும் .அந்த ‘த ‘வை வன் ஒலியாக மாற்ற வேண்டுமென்றால் ,அந்த எழுத்தின் முன் ஒரு ‘த் ‘ போட வேண்டும் .’காத்தல் ‘என்ற சொல்லை சொல்லிப் பாருங்கள் !தானாகவே ‘த ‘ வன் தொனி ‘த்த ‘என்றாகும் !இந்த தொனியியல் புரிந்தால் போதும் ,சந்திப் பிழைகள் தானாகவே வராது .
அதன் படி ,சரியான பயன் பாடு இதோ :
  1. முக்கிய செய்திகள்
  2. சென்னை பல்கலைக்கழகம் .(சென்னைப் பல்கலைக் கழகம்—’ப் ‘ தேவையில்லை .’க் ‘தேவை )  
  3. அவசர செய்தி (அவசரச் செய்தி தவறு)
இதைக்குறித்து டுவிட்டரில் ஒரு வாக்கெடுப்பு எடுத்திருந்தேன்  .நமது வாக்கெடுப்பில் 52% தவறான பதில் தந்திருந்தார்கள் .காரணம் அவர்களல்ல .'முக்கியச் செய்திகள்' என்று தவறாக பயன் படுத்தும் ஊடகங்கள் தாம் .
சொல்லி பார்த்தால் போதும்! இலக்கண விதிகள் தெரிய வேண்டியதில்லை. 'சந்தி பிழை' என்று 4 முறை சொல்லி பாருங்கள்.அதில் தேவையான  'ப்' தானாகவே வரும் !

3 comments:

  1. நன்றி. நல்ல பதிவு. எனக்கு மிகவும் பயன்தரும்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே உங்களுக்கு.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்
    நாமும்
    தமிழறிவோம்

    ReplyDelete